பெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை… டி.டி.வி.தினகரன் கண்டனம்

 

பெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை… டி.டி.வி.தினகரன் கண்டனம்

பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவரணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை… டி.டி.வி.தினகரன் கண்டனம்இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகர அ.ம.மு.க மாணவர் அணிச் செயலாளர் பாண்டி என்கிற வல்லத்தரசு, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் இனி நடக்காதவாறு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.ம.மு.க கட்சிப் பணிகளிலும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்குவதிலும் துடிப்போடு செயல்பட்டு வந்த பாண்டிய இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்