“100 நாளில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

 

“100 நாளில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“100 நாளில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுர வீட்டில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது. அதில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை குறித்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ” விடியலை நோக்கி , மக்கள் கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஜனவரி 29 முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் புதிய முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன். கொரோனா காலத்தில் மக்களை அதிமுக அரசு கைவிட்டுவிட்டது; குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரின் வாழ்க்கையையும் நிர்கதியாக்கி விட்டது.

“100 நாளில் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது. பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு, சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை. ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும். தேர்தல் அறிக்கை வேறு; 100 நாள் செயல்திட்டம் வேறு. மக்களின் பிரச்னைகளை அறிந்து திமுக ஆட்சி அமைந்தவுடன் 100நாளில் அவையெல்லாம் தீர்க்கப்படும். மக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை http://stalinani.com என்ற இணையதளம் அல்லது 9179091790 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள். தி.மு.க ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்கள் போர்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும். விண்ணப்பத்தில் மக்கள் குறைகள் எழுதி கொடுத்தால் போதும்; மக்கள் பிரச்னைகள் தொடர்பாகமனுக்களை நானே சேகரித்து சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன்.சொன்னதை செய்வோம்ல்; செய்வதை தான் சொல்வோம் என்பதற்கு ஏற்பவே, கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளேன்” என்றார்.