மக்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துதல் தொடரும் – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

 

மக்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துதல் தொடரும் – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 17,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பினும் பாதிப்பு குறையவில்லை. சென்னை பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவது ரத்து செய்யப்படுவதாகவும் தனிமை படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மக்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துதல் தொடரும் – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீடுகளிலேயே தனிமை படுத்துவது தொடரும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு லேசான அறிகுறி இருந்தால் அவர்கள் வீட்டிலேயே தனிமை படுத்தப்படுத்திக் கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்திருப்பதாகவும் அவர்கள் வெளியே செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, வீட்டில் தனிமை படுத்திக் கொள்ளாதவர்கள் மட்டுமே முகாம்களுக்கு அழைத்து செல்ல படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.