வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரை ஓட ஓட விரட்டிய மக்கள்!

 

வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரை ஓட ஓட விரட்டிய மக்கள்!

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் கே.பத்மநாபன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு களமிறங்குகிறார். அவரை எதிர்த்து அதிமுகவின் பத்மநாபன் போட்டியிடுகிறார். இவரை வேட்பாளராக அறிவித்ததற்கு அத்தொகுதி அதிமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காரணம் கட்சிக்காக அவர் செலவில் எந்த நிகழ்ச்சியும் நடத்தியதில்லை. நலத்திட்ட உதவிகளும் வழங்கியதில்லை. எனவே, இந்த வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இருப்பினும் வேட்பாளர் மாற்றப்படவில்லை.

வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரை ஓட ஓட விரட்டிய மக்கள்!

இந்நிலையில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே உள்ள முஸ்லீம் தெருவில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் பத்மநாதனை, அப்பகுதி மக்கள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். வேட்பாளருடன் அமைச்சர் வளர்மதி சென்ற நிலையில், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பர