சாலையில் வரையப்பட்ட வேலுக்கு சூடம் ஏற்றும் மக்கள்! – கோவையில் பரபரப்பு

 

சாலையில் வரையப்பட்ட வேலுக்கு சூடம் ஏற்றும் மக்கள்! – கோவையில் பரபரப்பு

கோவையில் பல இடங்களில் இந்து அமைப்பினர் சாலையில் வேல் வரைந்துள்ளனர். அதற்கு பொது மக்கள் சூடம் காட்டி வணங்கிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையின் பல இடங்களில் வேல்

சாலையில் வரையப்பட்ட வேலுக்கு சூடம் ஏற்றும் மக்கள்! – கோவையில் பரபரப்பு

வரையப்பட்டிருந்தது. மக்கள் நடக்கும் இடத்தில், வண்டிகள் செல்லும் பகுதியில் வேல் வரையப்பட்டு இருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், இதை வரைந்தது இந்து அமைப்பினர் என்று தெரிந்த உடன் மக்கள் அமைதி அடைந்தனர். தற்போது அந்த வேலுக்கு மக்கள் சூடம் காட்டி வணங்கி வருகின்றனர். மூதாட்டி ஒருவர்

சாலையில் வரையப்பட்ட வேலுக்கு சூடம் ஏற்றும் மக்கள்! – கோவையில் பரபரப்புகற்பூரம் ஏற்றி வணங்கி வழிபடும் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சாலையில் வேல் வரைந்தது தொடர்பாக பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட

சாலையில் வரையப்பட்ட வேலுக்கு சூடம் ஏற்றும் மக்கள்! – கோவையில் பரபரப்பு

அமைப்பினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைக் கண்டித்து இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தது நேற்று கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் காலில் மிதிபடும் இடத்தில் வேல் ஓவியம் இருப்பது அசௌகரியத்தை தருவதாக மக்கள் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.