பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது – ராதாகிருஷ்ணன்

 

பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது – ராதாகிருஷ்ணன்

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் குறைந்துள்ளது. பாதிப்பு படிப்படியாக குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. லேசான அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

பாதிப்பு குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது – ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. கடந்த மே மாதம் ஆக்சிஜன் தட்டுபாடு பெரும் சவாலாக இருந்த நிலையில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணத்தை வசூலித்த தனியார் மருத்துவமனைகள் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் கூடுதல் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.