இளைஞர் மர்ம மரணம்; போலீசாரை கைது செய்யக்கோரி மக்கள் மறியல் போராட்டம்!

 

இளைஞர் மர்ம மரணம்; போலீசாரை கைது செய்யக்கோரி மக்கள் மறியல் போராட்டம்!

பேரையூர் அருகே இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரை கைது செய்யக்கோரி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கண்ணியப்பன் என்பவரது மகன் ரமேஷ். இவரது அண்ணன் இதயக்கனி, புனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டார். இது குறித்து புனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை செய்ய ரமேஷை காவல்துறையினர் அழைத்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு விசாரணைக்கு சென்ற ரமேஷ், ஊருக்கு வெளியே இருக்கும் மரத்தில் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளைஞர் மர்ம மரணம்; போலீசாரை கைது செய்யக்கோரி மக்கள் மறியல் போராட்டம்!

போலீசார் தான் ரமேஷை கொலை செய்து விட்டு தூக்கு மாட்டி விட்டதாக குற்றஞ்சாட்டிய அக்கிராம மக்கள், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் ரமேஷின் உடலை மரத்தில் இருந்து நீக்க விடுவோம் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாப்டூர் காவலர்கள் ஜெயக்கண்ணன் மற்றும் புதியராஜா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ரமேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜெயக்கண்ணன் உள்ளிட்ட காவலர்களை கைது செய்ய வேண்டும் என அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் 2 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.