‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள் என நினைக்காதீர்கள்..’- சாத்தான்குளம் சம்பவம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு..

 

‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள் என நினைக்காதீர்கள்..’- சாத்தான்குளம் சம்பவம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு..

கோவில்பட்டி கிளைச்சிறையில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததாகக்கூறி, காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட இருவரையிம் காவல் துறையினர் கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாலிவுட் பிரபலங்கள், கோலிவுட் பிரபலங்கள், பொது மக்கள், மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலரும் தங்களது கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள் என நினைக்காதீர்கள்..’- சாத்தான்குளம் சம்பவம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு..

அந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள்’ என நினைக்காதீர்கள் என முதலமைச்சருக்கு டேக் செய்து தன்னுடைய கண்டனத்தை மிரட்டல் தொனியில் வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படத்தை வெளியிட்ட உதயநிதி, அவர்கள் தன்னிடம் கூறியதாக பதிவு ஒன்றையும் இட்டிருந்தார். அதில் ‘அப்பா, தம்பியைப் பற்றி விசாரிங்க சார். ஒருத்தர்கூட தப்பா சொல்லமாட்டாங்க. தம்பி அத்தனை முறை இரத்ததானம் பண்ணியிருக்கான். அவ்வளவு நல்லவன். அவங்களை ஹாஸ்பிடல்ல இருந்து காப்பாத்தினா போதும்னு தவிச்சோம்.”

 

” ஆனா எல்லாமே முடிஞ்சிடுச்சு.’ அவர்கள் சொல்லச்சொல்ல, ‘இப்படியான செயலை மிருகங்கள்கூட செய்யத் துணியாது’ என்று தோன்றியது. கிளம்பும்போது, ‘எங்களுக்கு நீதி வேணும் சார்’ என்றனர். எளிய மனிதர்களின் உறுதியான வார்த்தைகள் அவை. நீதி கிடைக்கக் கழகம் துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.