நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி… அதிகாரிகள் அலட்சியத்தால் பண்ணைபுரம் மக்கள் பீதி

 

நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி… அதிகாரிகள் அலட்சியத்தால் பண்ணைபுரம் மக்கள் பீதி

தேனி

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் நெடுஞ்சாலையில் அறுந்து தொங்கும் உயர் அழுத்த மின்கம்பியை அதிகாரிகள் சீரமைக்காததால் அந்தபகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த பண்ணைப்புரம் பகுதியில் நேற்று மாலை தேவாரம் நெடுஞ்சாலையோரத்தில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி… அதிகாரிகள் அலட்சியத்தால் பண்ணைபுரம் மக்கள் பீதி

எனினும் அறுந்து விழுந்த மின்சார கம்பியால் உயிர்தேசம் ஏற்படாமல் தடுக்கும் விதமாக அந்தபகுதி மக்கள் பண்ணைப்புரம் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் மின்கம்பியை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சாலையை கடந்துசெல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், மின்கம்பி அறுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.