ஊரடங்கலாம் ஓவர் ஓவர்… எல்லாம் வேலைய பாரு!! சென்னையில் கடற்கரை பக்கம் குவிய தொடங்கிய பொதுமக்கள்!

 

ஊரடங்கலாம் ஓவர் ஓவர்… எல்லாம் வேலைய பாரு!! சென்னையில் கடற்கரை பக்கம் குவிய தொடங்கிய பொதுமக்கள்!

17 நாட்களுக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்தனர்

கடந்த 17 நாட்களாக சென்னையில் முழு ஊரடங்கு நீடித்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வராமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊரடங்கில் இருந்து கட்டுப்பாடுகளுடன் சில தவறுகளை அறிவித்துள்ளது. இதனால் வீடுகளில் முடங்கி இருந்த பலர் இன்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். அதேபோல் பல கடற்கரை பக்கமும் குவிந்தனர். மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அருகில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஜோடி ஜோடியாக இளைஞர்களும், பொதுமக்களும் கடற்கரை காற்று வாங்கினார்.

ஊரடங்கலாம் ஓவர் ஓவர்… எல்லாம் வேலைய பாரு!! சென்னையில் கடற்கரை பக்கம் குவிய தொடங்கிய பொதுமக்கள்!

இதனால் பட்டினப்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிக அளவில் காணப்பட்டன. மேலும் மாலை 6 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே வரக்கூடாது என்பதால் கடற்கரையில் இருந்த பொதுமக்களை போலீசார் ஒலிபெருக்கி மூலமாக அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இதைத்தொடர்ந்து கடற்கரையில் உல்லாசமாக காற்று வாங்கிய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.