மக்கள் நிற்க கூட இடமில்லை.. சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் மீண்டும் விற்பனை தொடக்கம்!

 

மக்கள் நிற்க கூட இடமில்லை.. சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் மீண்டும்  விற்பனை தொடக்கம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மற்றும் குஜாராத்தை தொடர்ந்து அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழிகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 17,000ஐ எட்டியுள்ளது. இதில் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.

மக்கள் நிற்க கூட இடமில்லை.. சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் மீண்டும்  விற்பனை தொடக்கம்!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்க மிகவும் பிரபலமான டெல்லி நேரு அரண்மனைக்கு அடுத்து, சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் தான் பிரபலம். மிகப்பெரிய வணிக இடமான அங்கு கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதோடு மிக மலிவான விலையில் தரமான பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

இதானல் எப்போதுமே ரிச்சி ஸ்ட்ரீட்டில் கூட்டம் அதிகமாகத் தான் இருக்கும். சென்னைக்கு வரும் எல்லாரும் கண்டிப்பாக ரிச்சி ஸ்ட்ரீட்க்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். ஊரடங்கால் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த ரிச்சி ஸ்ட்ரீட், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு மக்கள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் கூடுவதாக தகவல்கள் வெளியாகிறது.