எடை குறைக்கும், முடி வளர்க்கும் நிலக்கடலை!

 

எடை குறைக்கும், முடி வளர்க்கும் நிலக்கடலை!

நிலக்கடலை… இதற்கு வேர்க்கடலை, மணிலா, மணிலாகொட்டை, மல்லாட்டை, பீநட் என பலபெயர்கள் உண்டு. நிலத்தில் விளைவதால் நிலக்கடலை; பட்டாணி போல இருப்பதால் அது பீநட்; வேர்களில் காய்ப்பதால் வேர்க்கடலை என சொல்லிக்கொண்டே போகலாம். நிலக்கடலைக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு. இதுபற்றிச் சொல்கிறார் எழுத்தாளரும் பூமி இயற்கை வள பாதுகாவலருமான தே.ஞானசூரியபகவான்.

எடை குறைக்கும், முடி வளர்க்கும் நிலக்கடலை!
முடி வளர்க்கும்:
வைட்டமின் சி போதுமான அளவு நிலக்கடலையில் உள்ளது, வைட்டமின் சி நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் கொலாஜன் எனும் ரசாயனம் சுரக்கும். அத்துடன் நமது தலையில் பாலிக்கிள் எனப்படும் மயிர்கால்களை அது உறுதிப்படுத்துகிறது. இதனால் தலையில் மயிர் கொட்டுவது நிற்கும், வழுக்கை விழுவதும் தடைபடும். எனவே, தொடர்ந்து வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு வழுக்கை விழாது, பெண்களுக்கு நீண்ட கூந்தல் நிலைத்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நமக்கு வயதாகி விட்டது என்பது நமக்கு முதலில் சொல்வது நமது சருமம் என்னும் தோல்தான். தோலில் ஏற்படும் சுருக்கங்கள், வெடிப்புகள், மெல்லிய பள்ளமான கோடுகள்தான் முக்கிய அடையாளங்கள். இவை வராமல் தடுக்கும் சக்தி நிலக்கடலைக்கு உண்டு.

எடை குறைக்கும், முடி வளர்க்கும் நிலக்கடலை!
எடை குறைக்கும்:
உடல் எடை குறைக்க அற்புதமான உணவு நிலக்கடலை என்று பல சோதனைகள் நிரூபித்துள்ளன, தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். நிலக்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை.
ரெஸ்வெரட்ரால் என்பது பாலிஃபீனால் காம்பவுண்டுகளில் ஒன்று. இவை ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக வேலைபார்க்கும். புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். வறண்டுபோன சருமத்தை ஈரப்பசையுடன் பராமரிக்க உதவுகிறது. இதனை ஆன்டி-ஏஜிங் இன்கிரிடியன்ட் என்று சொல்கிறார்கள். சருமத்தை இளமையாக வைக்கவும் உதவுகிறது. இந்த ரெஸ்வரெட்ரால் ரசாயனத்தை ‘சூப்பர் ஹீரோ பார் த ஸ்கின்’ என்கிறார்கள். இது சருமத்தின் தோற்றத்தை பளிச் என மாற்றுகிறது.

எடை குறைக்கும், முடி வளர்க்கும் நிலக்கடலை!
நினைவாற்றல் மேம்படுத்தும்
வைட்டமின் பி3, நயாசின், பிளேவனாய்டுகள் ஆகியவை மூளையின் ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இதனால் மூளையின் முழுப்பரப்பிலும் ரத்த ஓட்டம் சீராகிறது. இவை மூன்றும் நிலக்கடலையில் போதுமான அளவு இருக்கிறது. எனவே, நிலக்கடலையை சீராக சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மேம்படும்.
பீட்டா சீட்டோஸ்டிரால் இது நமது உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கும் ரசாயனம். இந்த ரசாயனம் நிலக்கடலையில் கணிசமான அளவு உள்ளது, அதனால் இது ஆண், பெண் இருபாலரிடமும் புற்றுநோய் வருவதை 58 சதவிகிதம் வரை தடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. குறிப்பாக கழுத்து மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அது மேலும் பரவாமல் தடுக்கும் சக்தி நிலக்கடலைக்கு உண்டு. எனவே, குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்றுமுறை வேர்க்கடலை சாப்பிடுவதன்மூலம் இந்த புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
இப்படி பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள நிலக்கடலையை தயக்கமில்லாமல் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.