பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள்!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் இடமாற்றம் வழக்கமான ஒன்று தான் என்றாலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக திருமதி மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியர் மட்டுமல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள் அனைத்து பெண் ஆளுமைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் விவரம்…
மாவட்ட ஆட்சியர் – மகேஸ்வரி
வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் – சாமூண்டீஸ்வரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – திருமதி சண்முகபிரியா ..
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் – டாக்டர் அனுராதா
மாவட்ட சமூக நல அலுவலர் – சங்கீதா
மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் – தனலட்சுமி
மாவட்ட ஊட்டச்சத்து நல அலுவலர் – சற்குனா
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் – டாக்டர். ஜீவா
ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் – திவ்ய ஸ்ரீ
காஞ்சிக் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் – மணிமேகலை
காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் – மகேஸ்வரி
காஞ்சிபுரம் வட்டாட்சியர் – பவானி
வாலாஜாபாத் வட்டாட்சியர் – மித்ரா தேவி
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் – நிர்மலா
மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ( பொது) – திருமதி .கியூரி