“இந்த ஏமாற்றுக்கார உலகில் என்னால் வாழ முடியவில்லையே”- விரக்தியடைந்த பெண் அதிகாரி தற்கொலை..

 

“இந்த ஏமாற்றுக்கார உலகில் என்னால் வாழ முடியவில்லையே”- விரக்தியடைந்த பெண் அதிகாரி தற்கொலை..

உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் பி.சி.எஸ். அதிகாரி மணி மஞ்சரி ராய் .இவர் மும்பை மற்றும் டெல்லியில் வேலை செய்துவிட்டு பல்லியா மாவட்டத்திற்கு நிர்வாக PCS அதிகாரியாக வந்தார் .அவர் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவரின் அலுவலகத்தில் பல பிரச்சினைகளாம் .கூட இருந்த ஊழியர்களே இவரை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்கள் .இதனால் கடுமையான மன உளைச்சலில் அவர் இருந்துள்ளார் .

“இந்த ஏமாற்றுக்கார உலகில் என்னால் வாழ முடியவில்லையே”- விரக்தியடைந்த பெண் அதிகாரி தற்கொலை..இந்த கடுமையான மன அழுத்தம் காரணமாக கடந்த வாரம் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
தகவலறிந்த போலீசார் அவரின் வீட்டிற்கு வந்து அவரின் பிரேதத்தை கைப்பற்றினர் .பிறகு பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .அப்போது அங்கு வந்திருந்த அவரின் தந்தையிடம் போலீசார் விசாரித்த போது, அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை ,இவ்வளவு பெரிய பொறுப்புக்கு மிக சிறிய வயதிலேயே கடுமையாக போராடி வந்த தன்னுடைய மகளை யாரோ கொலை செய்துள்ளார்கள் என்று கூறினார் .சம்பவ இடத்தில தற்கொலை குறிப்பு எதுவும் இல்லாத போலீசார் பல கோணங்களில் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர் .

“இந்த ஏமாற்றுக்கார உலகில் என்னால் வாழ முடியவில்லையே”- விரக்தியடைந்த பெண் அதிகாரி தற்கொலை..அவரின் சமமூக ஊடக கணக்குகளை ஆராய்ந்ததில், அவர் கொஞ்ச நாளாக தீவிர மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும் ,இதற்கு காரணம் அலுவலக பிரச்சினையா இல்லை வேறு ஏதாவது காதல் பிரச்சினையா என்று போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள் .