“ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது; அதை செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்” – முதல்வர் ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் வாழ்த்து!

 

“ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது; அதை செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்” – முதல்வர் ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது; அதை செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்” – முதல்வர் ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் வாழ்த்து!

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “அன்புக்குரிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல செயல்களால், நீங்கள் செய்து வருகிறீர்கள்.

உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் அரசியல் செயல்பாடுகள் உங்கள் மாநிலத்திற்கு மட்டும் அல்ல; நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது . உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.