பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு : இன்று மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!

 

பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு : இன்று மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவர் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வரவிருக்கிறார். இவரது வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்போடு, சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு : இன்று மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!

இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அப்போது ரூ.4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவையையும், சென்னை பீச் முதல் அத்திப்பட்டு இடையிலான ரயில் சேவையும் தொடக்கி வைக்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.