இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் மாயம்: அதிர்ச்சி தகவல்!

 

இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் மாயம்: அதிர்ச்சி தகவல்!

62 பயணிகளுடன் புறப்பட்ட ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 62 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. அந்த விமானம் ஃபோண்டியானாக் பகுதி அருகே சென்ற போது விமானத்துடன் தரைக்கட்டுபாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் மாயம்: அதிர்ச்சி தகவல்!

காணாமல் போன அந்த விமானம், போயிங் 737-500 ரகத்தை சேர்ந்ததாம். ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் என்ன ஆனது? அதில் சென்ற 62 பயணிகளின் நிலை என்ன? போன்ற கேள்விகள் வெகுவாக எழுந்துள்ளது. காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

26.77 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தோனேஷியா, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், தகுதி வாய்ந்த விமானிகள் என ஆசிய விமான போக்குவரத்தில் சிறந்த நாடாக விளங்குகிறது. அங்கு சமீப காலமாக விமான விபத்துகள் அதிகமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.