ரயிலில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பயணி: பாய்ந்து சென்று காப்பாற்றிய போலீஸ்!!!

 

ரயிலில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பயணி: பாய்ந்து சென்று காப்பாற்றிய போலீஸ்!!!

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய நபரை போலீஸ் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கோவையில் நடந்தேறியுள்ளது.

ரயிலில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பயணி: பாய்ந்து சென்று காப்பாற்றிய போலீஸ்!!!

கோவை ரயில் நிலையத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் ரயிலானது நேற்று மாலை 4.30 மணிக்கு 3வது பிளாட்பார்முக்கு வந்துள்ளது. அப்போது ரயில் கிளம்பிய நிலையில் அங்கு வந்த பயணி ஒருவர், ஒடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் துரிதமாக மீட்டுள்ளார். கால் தவறி விழுந்து வண்டியின் கம்பியை பிடித்துக்கொண்டே சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையல் அங்கு பணியில் இருந்த காவலர் சிரிஜித் பயணியை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றினார். இதற்கான வீடியோவை ரயில்வே துறை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆபத்தில் சிக்கிய நபரை தனது உயிரையும் பொருட்படுத்தாது புத்திசாலித்தனமாக மீட்ட ஆர்பிஎப் போலீஸ் சிரிஜித்தை ரயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.