ஓடும் ரயிலில் நெஞ்சுவலியால் பயணி உயிரிழப்பு!

 

ஓடும் ரயிலில் நெஞ்சுவலியால் பயணி உயிரிழப்பு!

திருச்சி

திருச்சியில் ஓடும் ரயிலில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (54). இவர் சென்னையில் உளள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று பொதிகை விரைவு ரயில் விருதுநகருக்கு திரும்பி கொண்டிருந்தார். அரியலூர் அருகே ரயில் வந்தபோது, கோபால கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

ஓடும் ரயிலில் நெஞ்சுவலியால் பயணி உயிரிழப்பு!

இதனை அடுத்து, அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவனைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர். அதன் பேரில் திருச்சி ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. ரயில் திருச்சி வந்தடைந்த பின் கோபாலகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.