“ஓட்ட வண்டிய ரிப்பேர் பண்ணி காலத்தை ஓட்ட முடியலே” -மெக்கானிக் பண்ண வேலையால் உயிரிழந்த சிறுவன்.

 

“ஓட்ட வண்டிய ரிப்பேர் பண்ணி காலத்தை ஓட்ட முடியலே” -மெக்கானிக் பண்ண வேலையால் உயிரிழந்த சிறுவன்.


ஒரு பணக்காரர் வீட்டருகே குடியிருந்த ஒரு மெக்கானிக் அந்த வீட்டு சிறுவனை கடத்தி , கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“ஓட்ட வண்டிய ரிப்பேர் பண்ணி காலத்தை ஓட்ட முடியலே” -மெக்கானிக் பண்ண வேலையால் உயிரிழந்த சிறுவன்.

தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் தீக்ஷித் என்ற ஒரு சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான் .அவர் வீட்டினருகே மந்த சாகர் என்ற ஓரு மெக்கானிக் குடியிருந்தார் .அவருக்கு டூ வீலர் ரிப்பேர் செய்து வரும் வருமானம் போதவில்லை .அதனால் அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஒரு திட்டம் தீட்டினார் .அதன்படி அவர் வீட்டருகே குடியிருக்கும் பணக்கார வீட்டு சிறுவன் தீக்ஷித்தை கடந்த ஞாயிற்று கிழமையன்று மாலை தன்னுடைய வண்டியில் கலபசலப்பள்ளியில் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு கடத்தி சென்றுவிட்டார் .
பிறகு அந்த மெக்கானிக் அவரின் பெற்றோருக்கு போன் செய்து, தங்களின் மகனை கடத்தி வைத்துள்ளதாகவும் ,அவனை உயிரோடு மீட்க 45 லட்சம் ரூபாய் பணத்தோடு தான் சொல்லும் இடத்திற்கு வரவேண்டுமென்று மிரட்டினார் .இதனால் அந்த சிறுவனின் பெற்றோர்கள் அந்த மெக்கானிக் மீது போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் அந்த மெக்கானிக் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள் .
இந்த விஷயத்தை அறிந்த அந்த மெக்கானிக் அந்த சிறுவனை கொலை செய்து அங்குள்ள ஒரு தனிமையான பகுதியில் பாதி எரிந்த நிலையில் வீசி விட்டு சென்று விட்டார்.பின்பு போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அந்த மெக்கானிக்கை கைது செய்தார்கள் .

“ஓட்ட வண்டிய ரிப்பேர் பண்ணி காலத்தை ஓட்ட முடியலே” -மெக்கானிக் பண்ண வேலையால் உயிரிழந்த சிறுவன்.