பேரறிவாளனுக்கான பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

 

பேரறிவாளனுக்கான பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேரறிவாளனுக்கான பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர் பேரறிவாளன். சிறை அனுபவம், மனஅழுத்தம் காரணமாக பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா பேரிடர் காலம் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், நீண்டநாள் விடுப்பு வழங்க தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு அவர் புழல் சிறையிலிருந்து திருப்பத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.தற்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் பிரச்சனைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேரறிவாளனுக்கான பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்தது தமிழக அரசு. உடல்நலக் குறைவுக்கு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பரோல் நீட்டிக்கப்பட்டது. மே 28ல் சிறையிலிருந்து வெளியே வந்த பேரறிவாளனுக்கு நான்காவது முறையாக ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ளது.