“என் பொண்ண வாங்கிக்கோ ,என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” -சோறு போட்ட மகளை கூறு போட்டு விற்ற பெற்றோர் .

 

“என் பொண்ண வாங்கிக்கோ ,என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” -சோறு போட்ட மகளை கூறு போட்டு விற்ற பெற்றோர் .


ஒரு பெற்றோரின் 12 வயது மகளை அவர்களிடமிருந்து 10000 ரூபாய்க்கு வாங்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

“என் பொண்ண வாங்கிக்கோ ,என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” -சோறு போட்ட மகளை கூறு போட்டு விற்ற பெற்றோர் .


ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடாவில் உள்ள கோட்டூரில் 46 வயதான சின்னா சுப்பையா என்பவர் வசித்து வந்தார் .அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தகராறு வந்ததால் அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .அதனால் அவர் தனியே வசித்து வந்தார் .
இந்நிலையில் அவரின் வீட்டுக்கருகே ஒரு தினசரி கூலி தொழிலாளி வசித்து வந்தார் .அவருக்கு நிறைய பெண் குழந்தைகள் இருந்ததால் அவர்களை வளர்க்க அவர் மிகுந்த சிரமப்பட்டார் .மேலும் அந்த பெற்றோரின் இன்னொரு மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரின் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது .அதனால் 12 வயதான அவரின் பெரிய மகளை யாரிடமாவது விற்று பணம் திரட்ட முடிவெடுத்தனர் .
அப்போது அவர்களின் வீட்டருகே வசிக்கும் சுபையா தனியே வசிப்பதை பார்த்து அவரிடம் தங்களின் மகளை விற்க முடிவு செய்து, இது பற்றி அவரிடம் கேட்டனர் .அப்போது அவரின் மகள் மீது ஏற்கனவே ஒரு கண் வைத்திருந்த அவர் உடனே அதற்கு சம்மதித்து, அவர்களின் மகளை விலை பேசினார் .அவர்கள் 10000 ரூபாய்க்கு விற்க முடிவெடுத்ததும், உடனே அவர் அநத 10000 ரூபாய் பணத்தை அந்த பெற்றோரிடம் கொடுத்து விலைக்கு வாங்கி சென்றார் .பின்னர் அந்த பெண்ணை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து சென்று அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தார் .பின்னர் அந்த அறையிலிருந்து அந்த சிறுமி அலறியதால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சேர்த்தனர் ,பின்னர் அந்த போலீசார் அந்த சிறுமியை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர் .பிறகு சிறுமியை வாங்கிய சுப்பையா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“என் பொண்ண வாங்கிக்கோ ,என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” -சோறு போட்ட மகளை கூறு போட்டு விற்ற பெற்றோர் .