காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

கோவை

சூலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள வேலப்பநாயக்க பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். விவசாயி. இவரது மகள் சரண்யா (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே, சரண்யா, தனது உறவினரான கார்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

இதனால் சரண்யா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சின்னராஜ், மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சின்னராஜ் அளித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.