‘திருமணம் ஆகாமல் கர்ப்பமான மகள்’ கொன்று தண்டவாளத்தில் வீசிய பெற்றோர்; உ.பியில் பயங்கரம்!

 

‘திருமணம் ஆகாமல் கர்ப்பமான மகள்’ கொன்று தண்டவாளத்தில் வீசிய பெற்றோர்; உ.பியில் பயங்கரம்!

உ.பியில் திருமணம் ஆகாமல் கர்ப்பம் ஆன இளம்பெண்ணை, அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டம் அலபூர் அருகே உள்ள தண்டவாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிஷுண்தாஸ்பூர் கிராமத்தில் வசிக்கும் கமலேஷ் குமார் யாதவ் மற்றும் அனிதா தேவி தம்பதியின் மகள் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

‘திருமணம் ஆகாமல் கர்ப்பமான மகள்’ கொன்று தண்டவாளத்தில் வீசிய பெற்றோர்; உ.பியில் பயங்கரம்!

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 24ம் தேதி தங்களின் மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றதாகவும் அப்போது அவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்ததாகவும் அதற்கு காரணம் யார் என்பதை மகள் சொல்ல மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

‘திருமணம் ஆகாமல் கர்ப்பமான மகள்’ கொன்று தண்டவாளத்தில் வீசிய பெற்றோர்; உ.பியில் பயங்கரம்!

மேலும், திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆனதால் அவரை தண்டவாளம் அருகே அழைத்துச் சென்று கோடரியால் அடித்துக் கொலை செய்ததாகவும் தற்கொலை போல சித்தரிக்க அங்கேயே சடலத்தை வீசிவிட்டு வீடு திரும்பியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.