காதலனுடன் சென்ற மகள்- வாகனத்தின் முன் விழுந்து கதறி அழுத பெற்றோர்

 

காதலனுடன் சென்ற மகள்- வாகனத்தின் முன் விழுந்து கதறி அழுத பெற்றோர்

நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், காதல் கணவனுடன் மகள் சென்றதை தாங்கி கொள்ள முடியாத பெற்றோர், வாகனத்தின் முன் விழுந்து புரண்டு கதறிய சம்பவம் பார்ப்போரை கலங்கச் செய்தது.

காதலனுடன் சென்ற மகள்- வாகனத்தின் முன் விழுந்து கதறி அழுத பெற்றோர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது.

இத்்ந்லையில் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அவர்கள், பாதுகாப்பு கோரி ஆயில் பட்டி போலீசாரிடம் தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருவரும் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி விஜயன் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பவதாரணி , கணவர் மணியுடன் தான் செல்வேன் என தெரிவித்தார்.

இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால், சட்டப்படி அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி கூறினார். இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு வந்த பவதாரணியின் பெற்றோர் தங்களது மகளை கீழே இறக்கி விட்டு செல்லுமாறு வாகனம் முன்பு படுத்து அழுது புரண்டனர். இதையடுத்து, காதல் ஜோடியை போலீசார் வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர், பவதாரணியின் பெற்றோரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.