“16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம், பாலியல் சித்திரவதை” – வசமாக சிக்கிய பெற்றோர்!

 

“16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம், பாலியல் சித்திரவதை” – வசமாக சிக்கிய பெற்றோர்!

சோழவந்தான் அருகே சிறுமியை கட்டாயத்திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த நபரும், சிறுமியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம், பாலியல் சித்திரவதை” – வசமாக சிக்கிய பெற்றோர்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இருக்கும் நெடுங்குளத்தில் வசித்து வருபவர் சடையாண்டி(30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு நடந்த கட்டாய திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்பினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம், பாலியல் சித்திரவதை” – வசமாக சிக்கிய பெற்றோர்!

உடனே சடையாண்டி வீட்டுக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டதோடு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததும் அம்பலமானது. இதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

“16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம், பாலியல் சித்திரவதை” – வசமாக சிக்கிய பெற்றோர்!

அந்த புகாரின் பேரில் சிறுமியின் பெற்றோர் பரமசாமி மற்றும் வள்ளியை குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், சடையாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.