“ஆசை தீர்ந்தது ,வெறுப்பு பிறந்தது” விவாகரத்துக்கு பிறகு வந்த காதல்- என்னாச்சி தெரியுமா ?

 

“ஆசை தீர்ந்தது ,வெறுப்பு பிறந்தது” விவாகரத்துக்கு பிறகு வந்த காதல்-  என்னாச்சி தெரியுமா ?


விவாகரத்து செய்த ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அந்த கணவர் அந்த பெண்ணையும் அவரின் மகனையும் வெட்டி கொன்றார்

“ஆசை தீர்ந்தது ,வெறுப்பு பிறந்தது” விவாகரத்துக்கு பிறகு வந்த காதல்-  என்னாச்சி தெரியுமா ?


குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் 30 வயது பெண் அங்கிதா தன்னுடைய கணவனை விவாகரத்து செய்து விட்டு தன்னுடைய 12 வயதான மகனுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மனைவியை டைவர்ஸ் செய்தவரான ஷாவுடன் நெருக்கம் உண்டானது ,இதனால் இருவரும் அடிக்கடி அவரின் அபார்ட்மெண்டில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர் .
இதற்கிடையே அந்த ஷா அந்த பெண் அங்கீதாவை தன்னுடைய வீட்டிற்கு நிரந்தரமாக வந்து விடுமாறு கூறினார் .அதை நம்பிய அந்த பெண் தன்னுடைய 12 வயதான மகனுடன் கடந்த வாரம் அந்த ஷாவின் அபார்ட்மெண்டுக்குள் குடி வந்தார் .அதன் பிறகு அவர்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது .இதன் காரணமாக அந்த ஷா அந்த பெண் அங்கீதாவை கோடரியால் வெட்டி கொன்றார் .அப்போது தடுக்க வந்த அவரின் 12 வயதான மகனையும் கோடாரியால் வெட்டி கொன்றார் .பிறகு மகனின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் காரில் கொண்டுவந்து ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் வீசி விட்டு சென்றார் .மறுநாள் வியாழக்கிழமை, பாவ்நகரில் உள்ள சித்ராஸ்-வர்தேஜ் சாலையில் உள்ள ஒரு சாக்கடையில் இருந்து அந்த பையனின் உடல் அந்த பகுதி மக்களால் மீட்கப்பட்டது.பிறகு போலீசார் அந்த இடத்திற்கு வந்து சிறுவனின் சடலத்தையும் ,வீட்டிலிருந்த அவரின் தாயாரின் சடலத்தையும் மீட்டு விசாரணை செய்து ,இந்த இரு கொலையை செய்த ஷாவை கைது செய்தனர் .