சேலத்தில் துணை ராணுவப்படை வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி!

 

சேலத்தில் துணை ராணுவப்படை வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி!

சேலம்

சேலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்திற்கு, சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இங்கு தங்கியிருந்த அஜிஸ்குமார் புட்டியா என்ற வீரர் இன்று அதிகாலை தன்னிடமிருந்த நவீன ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சேலத்தில் துணை ராணுவப்படை வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி!

இதில் தாடை பகுதியில் பலத்த காயமடைந்த அவரை, சக வீரர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அஜிஸ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.