நீலகிரியில் PaperBoat குளிர்பானத்திற்கு தடை.!

 

நீலகிரியில் PaperBoat குளிர்பானத்திற்கு தடை.!

நீலகிரி மாவட்டத்தில் 1-07-20 முதல் PaperBoat குளிர்பானத்தை விற்பனை செய்யத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் PaperBoat என்ற நிறுவனத்தின் குளிர்பானங்கள் சிறிய பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது. இந்த குளிர்பானத்தில் அடைக்கப்பட்டுள்ள பாக்கெட்டில் உட்புறமும், வெளிப்புறமும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தபடுவதாக சுற்றுச்சூழல் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

நீலகிரியில் PaperBoat குளிர்பானத்திற்கு தடை.!

இதனால், PaperBoat குளிர்பானத்தை வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கிறது. எனவே அனைத்து வணிக நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் வியாபார சங்கங்கள் ஆகியோர் மேற்கண்ட குளிர்பானங்களை நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.