தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் இன்று போராட்டம்!

 

தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் இன்று போராட்டம்!

தமிழகம் முழுவதும் சுமார் 12, 525 ஊராட்சி செயலாளர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் இன்று போராட்டம்!

தெற்குதிட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது போடப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்பிப்பெற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் இன்று போராட்டம்!

இதனிடையே கடலூர் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.