“பலாத்காரமும் செஞ்சிட்டார் ,பணத்தையும் பறிச்சிக்கிட்டார்” -பஞ்சாயத்து உறுப்பினரிடம் பஞ்சரான பெண்

 

“பலாத்காரமும் செஞ்சிட்டார் ,பணத்தையும் பறிச்சிக்கிட்டார்” -பஞ்சாயத்து உறுப்பினரிடம் பஞ்சரான பெண்


ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம் பறித்து பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்


ஒடிசா மாநிலம் ஹின்ஜிலி தொகுதியில் காஞ்சுடு பஞ்சாயத்து சமிதியில் உறுப்பினராக உள்ளவர் சூடம் என்ற நபர் .இவர் மகாராஷ்டிராவில் ஒரு பெண்ணோடு நட்பு கொண்டு பழகினார் .பின்னர் அந்த பெண்ணிடம் காதல் வயப்பட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறிக்க தொடங்கினார் .அதன் பின்னர் அந்த பெண்ணை பலாத்காரமும் செய்து விட்டார் .
இதனால் அந்த பெண்ணிடம் குறுகிய காலத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ஏமாற்றி பணம் பறித்துள்ளார் அந்த பஞ்சாயத்து உறுப்பினர் சூடம் .
அதனால் அந்த பெண் பலமுறை அவரிடம் சென்று பணத்தை கேட்டபோதெல்லாம் பணத்தையும் கொடுக்காமல் அந்த பெண்ணையும் கெடுத்துள்ளார் .இதனால் அந்த பெண் பொறுத்து பார்த்து முடியாமல் அவர் மீது போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார் .ஆனால் அதற்கெல்லாம் மசியாத அந்த பஞ்சாயத்து உறுப்பினர் உன்னால் முடிந்ததை செய்துக்கொள் என்று சவால் விட்டார் .
மகாராஷ்டிராவின் மணிபாடா காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து ஹின்ஜிலி காவல்துறையின் உதவியுடன் மகாராஷ்டிரா காவல்துறை குழு ஹின்ஜிலி தொகுதியில் காஞ்சுடு பஞ்சாயத்து சமிதியில் உறுப்பினர் சூடமை கைது செய்தது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி சூடம் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரிடமிருந்து லட்சம் ரூபாயையும் எடுத்துக் கொண்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
சூடாம் பின்னர் கஞ்சாமில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், .பின்னர் அங்குள்ள சிறையில் அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார் .

“பலாத்காரமும் செஞ்சிட்டார் ,பணத்தையும் பறிச்சிக்கிட்டார்” -பஞ்சாயத்து உறுப்பினரிடம் பஞ்சரான பெண்