பழனி பங்குனி உத்திரம் திருவிழா, மார்ச் 22-இல் துவக்கம்!

 

பழனி பங்குனி உத்திரம் திருவிழா, மார்ச் 22-இல் துவக்கம்!

திண்டுக்கல்

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திரம் திருவிழா வரும் மார்ச் 22 ஆம் தேதி, திருஆனன்குடியில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமார சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

பழனி பங்குனி உத்திரம் திருவிழா, மார்ச் 22-இல் துவக்கம்!

மார்ச் 27ஆம் தேதி திருக்கல்யாணம் வைபமும், வெள்ளித்தேரில் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது. மார்ச் 28 ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர், 31 ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெறுவது முருக பக்தர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.