ஈரோடு தலைமை அஞ்சலகத்தில், பழனி கோயில் பிரசாதம் பெறும் திட்டம் தொடக்கம்!

 

ஈரோடு தலைமை அஞ்சலகத்தில், பழனி கோயில் பிரசாதம் பெறும் திட்டம் தொடக்கம்!

ஈரோடு

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்த பிரசாதம் பெறும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம் பஞ்சாமிர்த பிரசாதத்தை, தபால் மூலம் பக்தர்களுக்கு வீடு தேடி வழங்க அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பார்சலில் அரை கிலோ பஞ்சாமிர்தம், விபூதி பாக்கெட், முருகனின் ராஜ அலங்கார உருவப்படம் ஆகியவை வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டம் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

ஈரோடு தலைமை அஞ்சலகத்தில், பழனி கோயில் பிரசாதம் பெறும் திட்டம் தொடக்கம்!

இதன்படி, பழனி பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள், ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பிரசாத பொருட்கள் அடங்கிய பார்சல் விரைவு தபால் மூலம் வீட்டிற்கே வந்து விடும் என அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் பிரத்யேக சிறப்பு மையம் செயல்பட்டு வருவதாகவும், இந்த மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும் அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.