பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா

 

பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா

எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துவந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.