நாம உறங்கும்போது கொரோனா வைரசும் தூங்கும்… சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளுக்கு டப் கொடுக்கும் பாகிஸ்தான் அரசியல்வாதி

 

நாம உறங்கும்போது கொரோனா வைரசும் தூங்கும்… சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளுக்கு டப் கொடுக்கும் பாகிஸ்தான் அரசியல்வாதி

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரவமாக பரவி வருகிறது. அதேசமயம் பலர் கொரோனா வைரஸ் குணமாக அல்லது முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என பல விசித்திரமான யோசனை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். சிலர் தனக்கு வந்த அது போன்ற செய்திகளை வாட்ஸ் அப் வாயிலாக பார்வேர்ட் செய்யும் கூத்துக்களும் அரங்கேறி வருகிறது.

நாம உறங்கும்போது கொரோனா வைரசும் தூங்கும்… சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளுக்கு டப் கொடுக்கும் பாகிஸ்தான் அரசியல்வாதி

இந்த சூழ்நிலையில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கே தெரியாத கொரோனா வைரஸ் தொடர்பான அபூர்வமான ஒரு செய்தியை, பாகிஸ்தானின் நேஷனல் சபை உறுப்பினராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அரசியல்வாதியான பசல் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் செய்தியாளர் நைலா இனாயத் தனது டிவிட்டரில், பசல் உர் ரஹ்மான் பேசிய வீடியோவை,நாம் சாகும்போது வைரசும் சாகும். சிம்பிள் எனற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நாம உறங்கும்போது கொரோனா வைரசும் தூங்கும்… சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளுக்கு டப் கொடுக்கும் பாகிஸ்தான் அரசியல்வாதி

பசல் உர் ரஹ்மான் அந்த வீடியோவில், நாம தூங்கும் போது வைரசும் தூங்கும் ஆகையால் மக்கள் நீண்ட நேரம் உறங்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நீங்க நீண்ட நேரம் தூங்கினால் வைரசும் தூங்கும். அது உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. நீங்க தூங்கும் போது வைரசும் தூங்கும் மற்றும் நீங்க இறக்கும் போது அதுவும் சாகும் என பேசியுள்ளார். தற்போது இணையதளத்தில் அது சிரிப்பு வீடியோவாக படுவைரலாக பரவி வருகிறது. நம்ம ஊருல மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிபுத்திசாலி அரசியல்வாதி இருக்காங்கன்னு இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது.