காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு 3 கார் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை

 

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு 3 கார் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு அண்டு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் நமது பாதுகாப்பு படையினரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 28ம் தேதியன்று புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டு இருந்த கார் குண்டுவெடிப்பை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இதனால் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டது.

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு 3 கார் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ இ முகமது, ஜம்மு அண்டு காஷ்மீரில் 3 கார் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை பாதுகாப்பு படையை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், கடந்த மாதம் புல்வாமாவில் தோல்வியில் முடிவடைந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலும் தீவிரவாத அமைப்பு மேற்கொள்ள இருந்த 3 கார் குண்டுவெடிப்பு திட்டங்களில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு 3 கார் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை

ஜெ.இ.எம். தீவிரவாத அமைப்பு, நோவ்காம், ஸ்ரீநகர் மற்றம் குல்கம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது வாகன அடிப்படையிலான ஐ.இ.டி. தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ஷோபியனில் ஜம்மு அண்டு காஷ்மீர் காவல்துறையினரை கடத்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் குழு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளை உளவுத்துறை அமைப்புகள் மேலும் எச்சரிக்கை செய்துள்ளன.