பண்ருட்டி அருகே லாரி மோதி பெயிண்டர் பலி!

 

பண்ருட்டி அருகே லாரி மோதி பெயிண்டர் பலி!

கடலூர்

பண்ருட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞர் மீது லாரி ஏறியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. பெயிண்டரான இவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தங்கி இருந்து, பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சூர்யா இன்று காலை கடலூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் பருண்ருட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

பண்ருட்டி அருகே லாரி மோதி பெயிண்டர் பலி!

பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளையம் அருகே சென்றபோது சூர்யா திடீரென வாகனத்துடன் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.