பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை – சித்தப்பா கைது!

 

பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை – சித்தப்பா கைது!

மதுரை

மதுரை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சித்தியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை யாகப்பா நகரை சேர்ந்த பெண் ஒருவர், கருமாத்தூர் முனாண்டிபட்டியை சேர்ந்த பெயிண்டர் ஜெகதீசன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்த பெண்ணின் அக்காள் மகள், தனது பாட்டியின் வீட்டில் தங்கி பிளஸ் 2 வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி, தனது சித்தியின் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த மாணவியை ஜெகதீசன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை – சித்தப்பா கைது!

மேலும், இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தால், சித்தியின் வாழ்க்கை பறிபோய் விடும் என கூறி மிரட்டி உள்ளார். இதனால் மாணவி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜெகதீசன், கடந்த 2 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மாணவி, ஜெகதீசன் மீது தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நியைத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஜெகதீசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.