காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வேதனையில் தூக்கில் தொங்கிய இளைஞர்…

 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வேதனையில் தூக்கில் தொங்கிய இளைஞர்…

ஈரோடு

ஈரோட்டில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் ரஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தமிழரசன் (22). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழரசன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பெற்றோர் வெளியே சென்ற நிலையில் தமிழரசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை மீண்டும் வீட்டுக்கு வந்த தமிழரசனின் பெற்றோர் கதவை தட்டியும், நீண்ட நேரமாக அவர் கதவை திறக்கவில்லை.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வேதனையில் தூக்கில் தொங்கிய இளைஞர்…

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தமிழரசன் அறையில் தூக்கிட்ட நிலையில் தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.