ரஜினிகாந்தின் முடிவு ஆச்சரியமாக உள்ளது- இயக்குநர் பா. ரஞ்சித்
Dec 30, 2020, 20:32 IST1609340532000
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அது குறித்த முக்கிய அறிவிப்பை டிச.31ம் தேதி வெளியிடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் ரஜினிகாந்த் நியமித்திருந்தார். ஆனால் உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என இன்று ரஜினிகாந்த் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதில்லை என்ற முடிவை எடுத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் அரசியலுக்கு வருவதற்கான அத்தனை திட்டங்களையும் காலா படப்பிடிப்பின் போதே அவர் வைத்திருந்தார் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.