மோடியை விமர்சித்த 24 பேர் கைது – “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என ப.சிதம்பரம் நக்கல் ட்வீட்!

 

மோடியை விமர்சித்த 24 பேர் கைது – “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என ப.சிதம்பரம் நக்கல் ட்வீட்!

கொரோனா இரண்டாவது அலையில் தொற்றின் தீவிரம் அதிகரித்து நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தடுப்பூசிக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து தகவல் வந்த வண்ணம் இருக்கின்றன. தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாகவே இருக்கிறது.

மோடியை விமர்சித்த 24 பேர் கைது – “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என ப.சிதம்பரம் நக்கல் ட்வீட்!

இச்சூழலில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு எப்படி வந்தது? நம் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. பிரதமரை விமர்சித்தால் கைது செய்வதா? இது ஜனநாயக நாடா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஐயா மோடி அவர்களே, எங்கள் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? இந்தக் கேள்வியைக் கேட்டு போஸ்டர் ஒட்டியதாக குற்றம்சாட்டி 24 பேரை டில்லி போலீஸ் கைது செய்தார்கள் ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவோமே!” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அந்த போஸ்டர்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.