பாஜகவின் ஹெச். ராஜாவை வெளுத்தி வாங்கிய ப.சிதம்பரம்!

 

பாஜகவின் ஹெச். ராஜாவை வெளுத்தி வாங்கிய ப.சிதம்பரம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. காரைக்குடியில் உள்ள தனது வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹெச்.ராஜா, முதல்வர் கல்லா கட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கிறீர்கள் என கோஷம் போட்டவர் முதல்வர் ஸ்டாலின். அது வேற வாய், இது வேற வாயா?. தொற்று 29 மடங்கு அதிகரித்திருக்கும் போது மதுக்கடைகளை எப்படி திறக்கலாம் என்று கடுமையாக சாடினார்.

பாஜகவின் ஹெச். ராஜாவை வெளுத்தி வாங்கிய ப.சிதம்பரம்!

டாஸ்மாக் கடையை திறப்பதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் கொள்ளை நடக்கும் என்று சொன்னோம்; மக்கள் கேட்கவில்லை அதனை தற்போது அனுபவிக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்கள் ஏண்டா போட்டோம் என்று நினைக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. வெறும் அரைவேக்காடு அமைச்சர்கள் ஆகி மக்களை படுத்தும் பாடு தாங்க முடியவில்லை என கடுமையாக விமர்சித்தார். ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எச்.ராஜாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஹெச்.ராஜா பிரச்சாரம் செய்து மதுக்கடைகளை மூடச் சொல்ல வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார். மதுக்கடைகள் இல்லாவிடில் கள்ளச்சாராயம் பெருகிவிடும்; இதை யாரும் மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.