ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு… நோயாளிகளை திருப்பி அனுப்பும் அவலம்…

 

ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு… நோயாளிகளை திருப்பி அனுப்பும் அவலம்…

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தடுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில், ஈரோடு அரசு மருத்துவமனையில்- 109, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 460, பிற இடங்களிலும் சேர்த்து 3,500 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். லேசான அறிகுறி உள்ள 2,500-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமையில் உள்ளனர்.

ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு… நோயாளிகளை திருப்பி அனுப்பும் அவலம்…

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி உள்ளன. மற்ற இடங்களில் உள்ள ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், எங்கு படுக்கை வசதி உள்ளதோ, அங்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏறபட்டு உள்ளது. இதனால் அவசர சிகிச்சை மற்றும் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்
.

ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு… நோயாளிகளை திருப்பி அனுப்பும் அவலம்…

இதுகுறித்து பேசிய தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, அரச்சலூர் என 2 இடங்களில், 33 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதில், 30 டன் அரசு மருத்துவமனைக்கும், 3 டன் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். சமீப காலமாக ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதுடன், பல நோயாளிகள் ஆக்சிஜன் வைத்தால் சிறந்தது என நினைக்கும்போது, அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குகிறோம். இதனால், தங்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதில்லை என்று கூறினர்.

மேலும், 17 கிலோ ஆக்சிஜன் சிலிண்டர், ரூ.700 முதல், ரூ.900-க்கு விற்ற நிலை மாறி தற்போது ரூ.1,500 முதல் ரூ.1,650-க்கு விற்கின்றனர் என்றும், வெளிச்சந்தையில் இதைவிட கூடுதல் விலைக்கும் ஆக்சிஜன் வாங்க தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்தனர். எனவே, இந்த நிலையை மாற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டனர்.