நோயாளிக்கு ஆக்சிஜன் அகற்றம் : ஈபிஎஸ் கடும் கண்டனம்!

 

நோயாளிக்கு ஆக்சிஜன் அகற்றம் : ஈபிஎஸ் கடும் கண்டனம்!

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஆக்சிஜனை அகற்றியதாக எழுந்த புகாருக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி நடு வீதியில் வசித்து வந்த கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா அவர்கள் (49) கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த 8ஆம் தேதி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் என்றும் நேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள் என்றும் நேற்று காலை சுமார் 9 மணியளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது அங்கு வந்த பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வென்டிலேட்டர் மெஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு வெளியேற முற்பட்டனர் என்றும் அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவியை தடுத்துவிட்டு வென்டிலேட்டர் மெஷின் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

நோயாளிக்கு ஆக்சிஜன் அகற்றம் : ஈபிஎஸ் கடும் கண்டனம்!

மேலும் போராடி அவருடைய மனைவியை கீழே தள்ளி விட்டனர் என்றும் இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார் என்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வருவதைப் பார்க்கும் போது நெஞ்சு பதைபதைக்கிறது.

இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.