கொரோனா தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்கும் : சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு!

 

கொரோனா தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்கும்  : சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் அவற்றின் வீரியம் வேகம் எடுக்கும் நிலையில் இதுவரை கொரோனா தடுப்பு மருந்து அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை. இதற்கான சோதனை முயற்சிகளை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்கும்  : சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு!

அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து இந்தியாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக மனித பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருந்து தர நிர்ணய கட்டுப்பாடு அமைப்பு , புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை ஆஸ்ட்ரா ஜெனகா என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.

கொரோனா தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்கும்  : சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு!

இந்த மருந்தானது 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் சுமார் 10 கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் விலை ரூபாய் 225 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.