அதிரடி திருப்பம்: தினகரனுடன் கைகோர்த்த ஒவைசி!

 

அதிரடி திருப்பம்: தினகரனுடன் கைகோர்த்த ஒவைசி!

அரசியலிலிருந்து சசிகலா பின்வாங்கி இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் போட்டியிடப் போவதாக ஒற்றைக் காலில் நிற்கிறார். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்; இல்லையேல் தனித்துப் போட்டியிடுவோம் என்ற தீர்க்கமான முடிவில் அவர் இருக்கிறார். அதற்குண்டான வேலைகளிலும் அவர் இறங்கிவிட்டார். கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டுவருகிறது.

அதிரடி திருப்பம்: தினகரனுடன் கைகோர்த்த ஒவைசி!

அதேசமயம் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கிறது.

அதிரடி திருப்பம்: தினகரனுடன் கைகோர்த்த ஒவைசி!

தினகரனுக்கும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தமிழக பொறுப்பாளருக்கும் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.