ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அண்ணாவின் வழியை விட்டு விலகி மோடி வழியில் செல்கிறது- ஓவைசி

 

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அண்ணாவின் வழியை விட்டு விலகி மோடி வழியில் செல்கிறது- ஓவைசி

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்காக அமமுக சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.அப்போது அமமுகவின் தேர்தல் பிரச்சார பாடலை கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். அமமுக பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் தற்போது சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் #TTV4TNCM ஹேஷ்டேக் முதலிடத்திலும், #வெற்றிசின்னம்குக்கர் இரண்டாம் இடத்திலும் சென்னை ட்ரெண்டானது.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அண்ணாவின் வழியை விட்டு விலகி மோடி வழியில் செல்கிறது- ஓவைசி

இதில் பங்கேற்று பேசிய ஓவைசி, “ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அண்ணாவின் வழி விட்டு மாறி மோடி வழியில் செல்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் என்பதே டிடிவியின் ஆசை” எனக் கூறினார்.