‘இதயங்களை இணைப்போம்’ என்ற திமுக மாநாட்டில் பங்கேற்கிறார் ஓவைசி

 

‘இதயங்களை இணைப்போம்’ என்ற திமுக மாநாட்டில் பங்கேற்கிறார் ஓவைசி

ஜனவரி 6 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ‘இதயங்களை இணைப்போம்’ என்ற மாநாட்டில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்கவிருக்கிறார்.

‘இதயங்களை இணைப்போம்’ என்ற திமுக மாநாட்டில் பங்கேற்கிறார் ஓவைசி

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் ‘இதயங்களை இணைப்போம்’என்ற பெயரில் திமுக மாநாடு நடத்தவுள்ளது. இம்மாநாட்டில் சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான் அழைப்பின் பேரில் அகிய இந்திய மஸ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்துகொள்ளவுள்ளார். இதன்மூலம் தமிழக தேர்தலிலும் ஓவைசி பங்கு இருக்கும் என தெரிகிறது.

அண்மையில் பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் மெகா கூட்டணி பல இடங்களில் தோல்வி அடைய அசாதுதீன் ஓவைசி கட்சியும் ஒரு காரணம் கூறப்பட்டது. பா.ஜ.க.வின் பி டீம் ஏ.ஐ.எம்.ஐ.எம். என்று காங்கிரஸ் குற்றம் சாட்டிவருவது குறிப்பிடதகக்து.