“பஜார்லேர்ந்து ,பஸ் ஸ்டாண்டு வரை 12 பேர்…” -பதினாலு வயசு பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

 

“பஜார்லேர்ந்து ,பஸ் ஸ்டாண்டு வரை 12 பேர்…” -பதினாலு வயசு பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

சந்தைக்கு தனியே சென்ற 14 வயதான பெண்ணை கடத்தி 12 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“பஜார்லேர்ந்து ,பஸ் ஸ்டாண்டு வரை 12 பேர்…” -பதினாலு வயசு பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் வசிக்கும் 14 வயதான சிறுமியொருவர் கடந்த ஜனவரி 11ம் தேதி முதல் திடீரென்று காணாமல் போனார் .அந்த சிறுமி காணாமல் போனதையடுத்து அவரின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் ,அந்த புகாரின் பேரில் அந்த பெண்ணை போலீசார் தேடி வந்தார்கள் .

இந்நிலையில் அந்த சிறுமியை 12 பேர்  சேர்ந்து கடத்தியதாகவும் ,அவர்கள் அவரை ஐந்து நாட்கள் ஒரு இடத்தில்  அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த சிறுமி கடந்த சனிக்கிழமை தப்பி வந்து அவரின் தாயிடம்  கூறினார் .அதன் பேரில் அந்த சிறுமியை அழைத்து கொண்டு அந்த பெண்ணின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்றார் .

அப்போது போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது ,தான் ஜனவரி 11ம் தேதி மாலை சந்தைக்கு சென்ற போது தன்னருகில் ஒரு கார் வந்து நின்றதாகவும் ,அதிலிருந்த சிலர் தன்னை அந்த காரில் கடத்தி சென்றதாகவும் கூறினார் .மேலும் அவர் கூறுகையில் அதன் பிறகு அவர்கள் தன்னை ஒரு தாபாவில்  அடைத்து வைத்ததாகவும் ,அங்கிருந்த பலர் தன்னை ஐந்து நாட்கள் பலாத்காரம் செய்தததாகவும் கூறினார் .

அதன் பிறகு அவர்களிடமிருந்து தான் தப்பி வந்த போது மேலும் சிலர் தன்னை பல இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.பிறகு போலீசார் அந்த பெண் கூறிய அடையாளத்தை வைத்து ஆறு பேரை கைது செய்தார்கள் .மேலும் சிலரை தேடி வருகிறார்கள் 

“பஜார்லேர்ந்து ,பஸ் ஸ்டாண்டு வரை 12 பேர்…” -பதினாலு வயசு பெண்ணுக்கு நேர்ந்த நிலை.