திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை!

 

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை!

தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பொதுமக்கள் வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது நிவர் புயல் மழை வெள்ளம் காரணமாக திருவண்ணாமலை தீப விழாவுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை!

இந்நிலையில் திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் வரத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.